Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனப்பெருக்க நடவடிக்கைக்காகவே குரங்குகள் கோரப்பட்டனவாம்

இனப்பெருக்க நடவடிக்கைக்காகவே குரங்குகள் கோரப்பட்டனவாம்

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகளை சீன விலங்கு வளர்ப்பு நிறுவனமொன்றே கோரியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனப்பெருக்க நடவடிக்கைகளுக்காக குரங்குகளை குறித்த நிறுவனம் கேட்டுள்ளதாகவும், இது இன்னும் கோரிக்கை மட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளை பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles