பலாங்கொடை, வெளிஅரனாவ நீர் தாங்கிக்கு அருகாமையில் இருக்கும் வளவ கங்கையில் நேற்று மாலை நீராடச் சென்ற இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.
15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு காணாமல் போனவர்கள் என பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களில் ஒருவர் எல்லராவ பகுதியையும் மற்றையவர் செக்னோல் வீதி பெங்ஙிவத்த பகுதியையும் சேர்ந்தவர் ஆவார்.
காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அதேநேரம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பலங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.