யாழ்ப்பாணம், பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், இது தொடர்பான விசாரணைகளையும் கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.