Saturday, June 14, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை

குறைந்த விலையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை

இலங்கைக்கு வரவுள்ள வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான ஒப்பந்தங்கள் இம்மாத இறுதியில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பாக்ஸ் என்ற மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை விட கணிசமான குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles