Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

அம்பாறை, கொனாகொல்ல சந்தியில் நீர் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அம்பாறை – வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 26 ஆம் திகதி விடுமுறை பெற்றுச்சென்று, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சிவில் உடையில் அவர் பங்கேற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles