செய்திகள்உள்நாட்டுகுடு சலிந்துவின் மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

குடு சலிந்துவின் மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள குடு சலிந்துவின் உயிரைப் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுஇ நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மடகஸ்கரில் கைது செய்யப்பட்டு தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள குடு சலிந்துவின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவரது உயிருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles