கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த உயர்தர விடைத்தாள் பரீட்சையை ஆரம்பிப்பதற்கு கல்வி வல்லுநர்கள் சங்கம் தலைமைத்துவம் வழங்க தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சருக்கும் சங்கத்துக்கும் இடையில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு உரையாற்றிய ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர், விடைத்தாள் மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த அடிப்படையில் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சர் இணங்கியதாக தெரிவித்தார்.
