ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலையை நாளை (05) முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்திடம் நாம் மேற்கொண்ட விசாரணையில், குறைக்கப்பட்ட விலைகள் தொடர்பில் நாளை (05) நுகர்வோருக்கு அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துடன் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
