Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம்

வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களிடம் இருந்து உள்வரும் நிதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வசதியாக புதிய கைப்பேசி செயலி மே முதலாம் திகதி முதல் அறிமுகமாகவுள்ளது.

புதிய செயலியான ‘லங்கா ரெமிட்’ இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக பிரதான விமான நிலையத்தில் சில தீர்வை சலுகைகளையும் வழங்கவுள்ளது.

இந்த நிவாரணம் ஐந்து வகைகளின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

2,400 முதல் 4,799 டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையை அனுப்பும் இலங்கையர்களுக்கு 600 டொலர் மேலதிக வரிச் சலுகை.

4,800 முதல் 7,199 டொலர் வரை அனுப்பும் தொழிலாளர்கள் 960 டொலர் கூடுதல் தீர்வை நிவாரணம் பெறுவார்கள்.

7,200 முதல் 11,999 டொலர் வரை அனுப்பும் ஊழியர்களுக்கு 1,440 டொலர் கூடுதல் வரி நிவாரணம் பெறுவார்கள்.

12,000 முதல் 23,999 டொலர் வரை பணம் அனுப்பும் தொழிலாளர்கள் கூடுதலாக 2,400 டொலர் வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள்.

24,000 டொலர் அல்லது அதற்கு மேல் அனுப்புபவர்கள் மேலதிகமாக 4,800 டொலர் வரிச் சலுகைக்கு தகுதியுடையவர்கள்.

ஒரு வருட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பணத்தை நாட்டுக்கு அனுப்பிய எவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles