இந்தியாவின் கேரள மாநிலம் எழத்தூர் பகுதியில் விரைவு ரயிலில் வைத்து பயணிகள் மீது இனந்தெரியாத ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனை கண்டு அச்சமடைந்த நிலையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் மூவரின் சடலங்களும் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன.
இந்தநிலையில் தீயினால் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் ஒடும் ரயிலில் தீ வைத்தவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.