வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தவளை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இச்சம்பவம் இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது.
தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டியின் தீயை பிரதேசவாசிகள் விரைந்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், தீப்பரவலினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.