Wednesday, January 21, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் நிதி அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் நிதி அதிகரிப்பு

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதேவ‍ேளை 2023 பெப்ரவரியில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் மொத்தமாக 407 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டு பெப்ரவரியில் வெளிநாட்டுப் பணம் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுமே இருந்தது.

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பதிவு செய்துள்ளது.

ஜனவரியில் இந்த எண்ணிக்கை 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles