பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்களை பணிப்புறக்கணிப்புக்கு அனுப்பும் தீர்மானத்திற்கு எதிராக இன்று (30) பிற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எடுத்த தீர்மானம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தி 20இற்கும் மேற்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (29) தெரிவித்தார்.
அவர்களுக்கு எதிராக தேவையான விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சு வளாகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.