முன்னாள் அமைச்சரான பிலிப் குணவர்தனவின் 51வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கினார்.
பிலிப் குணவர்தனவின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படமும் திரையிடப்பட்டதுடன், அவருக்காக உருவாக்கப்பட்ட பாடலும் இதன்போது வெளியிடப்பட்டது.
மகாசங்கரத்ன, முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிலிப் குணவர்தன தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை ஆவார்.