அப்பாவி மக்களை திருடர்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டைக் காப்பாற்றிய தலைவர்களைப் பாதுகாக்க இந்தியா போன்றதொரு அமைப்பு இந்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஊழல் மோசடிகளை தடுக்கும் வகையில் மிகவும் வலுவான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.