Thursday, December 25, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோலி நாணயத்தாள்களுடன் முன்னாள் கான்ஸ்டபிள் கைது

போலி நாணயத்தாள்களுடன் முன்னாள் கான்ஸ்டபிள் கைது

மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் 1,000 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்து மது போத்தல் ஒன்றை பெற்றுக்கொள்ள முற்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் 2011 ஆம் ஆண்டு கிராதுருகோட்டே பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் போது பெண் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (26) இரவு 7.00 மணியளவில் 1,000 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து மது போத்தலை பெற முற்பட்ட போது மதுபானசாலை ஊழியர்கள் சந்தேக நபரை தடுத்து வைத்து மாவனல்லை பொலிஸாருக்கு அழைத்து அவரை ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவரிடம் இருந்து மேலும் ஒரு 1,000 ரூபா போலி நாணயத்தாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles