ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும் உள்ளூர் மட்டத்திலும் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
“புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” தொடர்பில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” 2023 மே 05, 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள கங்காராம விஹாரை, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.