தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மரணம் தற்கொலையா கொலையா என்பதை கண்டறிய ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது நீண்ட விசாரணையாக மாறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை ஏப்ரல் 4ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.