Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு மீள கூடுகிறது

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு மீள கூடுகிறது

ஒளடத தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக, மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீளவும் கூடவுள்ளது.

மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை மருத்துவ சபை என்பன முன்வைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த விசாரணைகள் இடம்பெற்றபோதிலும், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அதில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், நாளை முற்பகல் 10 மணிக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles