இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 260 பொலிஸ் அதிகாரிகள் எவ்வித அறிவிப்புமின்றி சேவையிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த தகவலை பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட்கள் ஆவர்.
இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சினைகள், அதிக வேலைப்பளு, கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.