Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய நிதி அமைச்சர் – மிலிந்த மொரகொட சந்திப்பு

இந்திய நிதி அமைச்சர் – மிலிந்த மொரகொட சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்துள்ளார்.

இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக 2021 நவம்பர் முதல் அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நடத்தி வரும் தொடர்ச்சியான சந்திப்புகளின் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை நனவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் வகித்த தலைமைத்துவத்திற்காக இந்திய நிதியமைச்சர் சீதாராமனுக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

இந்தநிலையில் அமைச்சர் சீதாராமன் மற்றும் உயர்ஸ்தானிகர் மொரகொட ஆகியோர், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பில் முன்னோக்கி செல்லும் வழி குறித்தும் விவாதித்தனர்.

இந்திய முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பது, இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது, குறிப்பாக இந்திய ரூபாய் வர்த்தக விரிவாக்கம் மற்றும் இலங்கைக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles