சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெறப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
இன்று (21) காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியளித்துள்ளார்.