வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்துவதற்காக வழங்கப்பட்ட உரிமத்தில் வங்கி உத்தரவாதத்தை 750,000 ரூபாலிருந்து 3 மில்லியனாக உயர்த்தியுள்ளது.
இரண்டாவது வருடத்திலிருந்து 5 மில்லியனாக உத்தரவாதத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகளை கடுமையாக ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.