Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலை தொழிற்சாலைகள் முடங்கின

தேயிலை தொழிற்சாலைகள் முடங்கின

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சாரம் இல்லாத போது ஜெனரேட்டர்கள் மூலம் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும் டீசல் பற்றாக்குறையால் அது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளில் அறுவடை செய்யப்பட்ட இலைகளை, ஒரே நேரத்தில் அரைக்க வேண்டியுள்ளது,

மேலும் நீண்ட நேரம் மின்வெட்டு மற்றும் டீசல் தட்டுப்பாடு என்பன பணிக்கு இடையூறாக உள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி தேயிலை கைத்தொழிலுக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles