Friday, May 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் பால் உற்பத்தித்துறைக்கு உதவும் இந்தியா

இலங்கையின் பால் உற்பத்தித்துறைக்கு உதவும் இந்தியா

இலங்கையின் பால் உற்பத்தித் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு அதிக உற்பத்தி தரும் கால்நடைகளை வழங்குவதாகவும் இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

விவசாய அமைச்சின் கூற்றுப்படி, கடந்தாண்டு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி 19 சதவீதத்தால் குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles