Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்ஐந்தாவது நாளாகவும் முடங்கியது இந்திய நாடாளுமன்றம்

ஐந்தாவது நாளாகவும் முடங்கியது இந்திய நாடாளுமன்றம்

ஐந்தாவது நாளாக இந்திய நாடாளுமன்றின் இரு அவைகளும் இன்று முழுமையாக செயலிழந்ததன.

ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது.

காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராக லண்டனில் கருத்துரைத்தார் என்று பாரதீய ஜனதாக் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும் காங்கிரஸ் தரப்பினர் அதனை மறுக்கின்றனர்.

அதேநேரம் அதானி குழுமத்துக்கும் இந்திய பிரதமருக்கும் இடையிலான தொடர்பு குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது.

எனினும் பாரதீய ஜனதாக்கட்சி இந்த தொடர்புகளை மறுத்து வருகிறது.

இந்த விடயங்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மற்றும் கோசங்கள் காரணமாகவே இந்த ஐந்து நாட்களும் மக்கள் அவையும் மாநிலங்கள் அவையும் முடங்கின.

இந்தநிலையில் இரண்டு அவைகளின் அமர்வுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles