கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 7 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எச் வார்டில் சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வார்டில் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்த கைப்பேசிகள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.