யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான சிசுவொன்று போசனை குறைப்பாட்டால் உயிரிந்துள்ளது.
குறித்த குழந்தை யக்கமுற்ற நிலையி கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இம்மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்று பரிசோதனை கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.