ஹங்வெல்ல மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல கொலை சம்பவங்களுக்கு தலைமை தாங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கரவை கைது செய்ய சர்வதேச பொலிசார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
மேல் மாகாண தென் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் அவிசாவளை நீதிமன்றில் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹங்வெல்ல உணவகத்தின் உரிமையாளரின் கொலை சம்பவமும் டுபாயில் இருந்து அவரின் வழிகாட்டலில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.