கொழும்பு உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில் வளி மாசு அளவு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் நிறுவப்பட்டுள்ள வளிதர குறிகாட்டியின் அடிப்படையில் கொழும்பின் வளிதர சுட்டெண் நேற்று (16) காலை 9.00 மணியளவில் 142 ஆக அதிகரித்தது.
நேற்று (16) காலை வளி மாசு காரணமாக கொழும்பு நகரை சுற்றி இருள் சூழ்ந்து கடும் வெப்பம் நிலவியது.
இது தவிர யாழ்ப்பாணம், குருணாகல், கண்டி, கேகாலை, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய நகரங்களிலும் வளிதர சுட்டெண் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.