கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபட்டிருந்த 4 யாத்திரிகர்கள் உணவு விஷமானதால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 10 நோயாளர்கள் உணவு விஷம் மற்றும் பக்டீரியா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிவனொளிபாதமலை யாத்திரை மற்றும் பிற யாத்திரைகளில் ஈடுபடும் அனைத்து பக்தர்களும் ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்கள் முடிந்தவரை கொதிக்க வைத்த நீரை தங்கள் வீடுகளில் இருந்து எடுத்துச் செல்லுமாறு அவர் கூறினார்.