எவரெஸ்ட் சிகரம் கிருமிகள் நிறைந்த இடம் என அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை ஆர்க்டிக், அண்டார்டிக், ஆல்பைன் ஆராய்ச்சி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீட்டர் உயரத்தில், இமயமலை என்று அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம், ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும்.
எவரெஸ்ட் சிகரம் ஏறும் பலர் நோய்வாய்படுகின்றனர்.
இவ்வாறு நோயுற்றவர்களின் கிருமிகள் குளிர் காற்றில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
மனிதர்களை நோயுறச் செய்யும் பெரும்பாலான வைரஸ்கள் இமயமலைப் பகுதியின் குளிரில் படிவதாக விஞ்ஞானிகள் குழு விளக்கமளித்துள்ளது.
பல ஆண்டுகளாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று இறப்பவர்களின் சடலங்கள் பனியில் புதைக்கப்படுகின்றன.
பனி காரணமாக அவை நன்றாகப் பாதுகாக்கப்படுவதுடன், சுமார் 200 சடலங்கள் அங்கு காணப்படுவதாக கூறப்படுகிறது.
அவற்றின் கிருமிகள் எவரெஸ்ட் சிகரத்தின் பனி மற்றும் மண்ணில் சேர்க்கப்படுகின்றன.
#Reuters