Monday, June 16, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவளி மாசு அதிகரிப்பு - முகக்கவசம் அணிய பரிந்துரை

வளி மாசு அதிகரிப்பு – முகக்கவசம் அணிய பரிந்துரை

யாழ்ப்பாணத்தில் தற்போது வளி தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி யாழ்ப்பணம், வடக்கு மாகாணத்தில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரக் குறியீடானது 101 முதல் 150 வரை உள்ள பிரதேசங்களில் வசிக்கும் சிறார்கள், முதியோர் மற்றும் சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

151 முதல் 200 வரையிலான பிரதேசங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பாதகமான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles