Monday, June 16, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவயலில் பெண்ணின் சடலம் மீட்பு: இராணுவ சிப்பாய் கைது

வயலில் பெண்ணின் சடலம் மீட்பு: இராணுவ சிப்பாய் கைது

வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் சேற்றுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கண்டி, அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலான பல்லேகம எல்லேகடே என்ற பிரதேசத்தை சேர்ந்த தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி திருமணமாகி பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருடன் வீட்டில் தனியாக வசித்து வந்த்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10ஆம் திகதி இரவு கிராமத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு கணவர் சென்றிருந்துள்ளதுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த பின் மனைவியைக் காணவில்லை என அவர் பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளார்.

அதன் பின்னர், அனைவரும் குறித்த பெண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிய நிலையில் அவரது சடலம் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தினத்தன்று இரவு 9.30 மணியளவில் குறித்த பகுதியில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும், கதவைத் திறந்து பார்த்தபோது சத்தம் கேட்கவில்லை என்றும் அயலவர்கள் கூறுகின்றனர்.

சடலம் இருந்த இடத்திலிருந்து மோப்ப நாய் ஒன்று விடுவிக்கப்பட்டதையடுத்து, அந்த நாய் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சுற்றி வீடொன்றுக்கு சென்றுள்ளதுடன் அவ் வீட்டில் வசிக்கும் இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட அந்த யுவதியிடம் இராணுவ சிப்பாய் பல்வேறு கோரிக்கைகளை முன்​வைத்துள்ளார் என்பதும் அதனை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles