சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான உதவி முழுமையாக கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சீருடை விநியோகம் விரைவில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவினால் வழங்கப்படும் சீருடை தொகுதியின், இறுதிக்கட்ட விநியோகம் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.