Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் திகதி குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று

தேர்தல் திகதி குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி குறித்து ஆலோசிப்பதற்காக இன்று பல்வேறு சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு பிறகு, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே மற்றொரு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவும் இன்று தேர்தல் ஆணைக்குழுவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல்களின் அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய திகதி குறித்து அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles