வடமாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவும் நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை பெரும்பாலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், இந்நோயினால் சுமார் 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்ணி மற்றும் ஈக்களால் கால்நடைகளுக்கு இந்நோய் அதிகளவில் பரவுவதாக கால்நடை வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கால்நடைகளின் உடலின் சில பகுதிகளில் பசியின்மை, காய்ச்சல் மற்றும் நீர்க்கட்டிகள் போன்றவை அறிகுறிகளாகும்.