Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உதவி கிடைப்பதற்காக பசிலும் பாடுபட்டுள்ளார் - ரஞ்சித் பண்டார

IMF உதவி கிடைப்பதற்காக பசிலும் பாடுபட்டுள்ளார் – ரஞ்சித் பண்டார

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முக்கிய பங்காற்றியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை சீர்குலைக்கும் சதி பல்வேறு வழிகளில் நடைபெறுகிறது. அந்த மக்கள் 75 வருடங்களாக இந்த நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த குழுவிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் முதலிடம் பெற தேவையில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். அது முற்றிலும் பொய்யானது. இம்மாதம் மூன்றாவது வாரத்திற்குள் கடன் தொகை கிடைத்துவிடும் என நம்புகிறோம். அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே தற்போதைய ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.

இன்று அனைத்து விமர்சனங்களையும் முறியடித்து ரூபா மதிப்பு நிலைபெற்றுள்ளது. இது பொருளாதாரத்தில் நல்ல போக்கை காட்டுகிறது. அந்நிய கையிருப்பு குவிந்து வருகிறது. சுற்றுலாத் துறை மேம்பட்டு வருகிறது. பொதுஜன பெரமுன அதற்காக நிறைய அர்ப்பணிப்புகளை செய்தது. எனவே, சிங்கள, தமிழ் புத்தாண்டை நேர்மறை சிந்தனையுடன் கொண்டாட ஒன்றிணைவோம் என்றார்.

Keep exploring...

Related Articles