போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (05) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த கைதி உயிரிழந்துள்ளார்.
கருணாரத்ன பண்டார என்ற 56 வயதுடைய சந்தேக நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையும் நடைபெறவுள்ளதுடன், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.