Monday, June 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிபத்தில் சிக்கிய இருவரை காப்பாற்றிய மக்கள்

விபத்தில் சிக்கிய இருவரை காப்பாற்றிய மக்கள்

எல்ல-வெல்லவாய வீதியின் முதலாவது கந்தையில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

டிப்பரின் பின்புறம் காய்கறி லொறியுடன் மோதியதில், லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் வாகனத்திற்குள் சிக்கினர்.

இருப்பினும், அப்பகுதி மக்கள் மிகுந்த முயற்சியால் லொறியின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்து அதில் சிக்கிய இருவரையும் மீட்டனர்.

அவர்களை காப்பாற்ற ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் மீட்கப்பட்ட இருவரும் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles