Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் குறித்து தீர்மானம் நாளை

தேர்தல் குறித்து தீர்மானம் நாளை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நாளையதினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை சந்திப்பை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான நிதியை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவையொட்டி, அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சு மா அதிபர் உள்ளிட்டத் தரப்பினருடன் நாளை கலந்துரையாடப்படும்.

இதன் போது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles