சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இந்த மாதம் கிடைக்கப்பெறும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்துமே பூர்த்தியாகி விட்டன.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான காலம் வந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு இந்த உதவி கிடைக்கப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
