எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றிய மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களும் இலங்கையில் பங்குகளை பெற்றுள்ளதாக அதன் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே கூறினார்.
அத்துடன், நிலக்கரி தாங்கிய 16வது கப்பல் நாளை (05) நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
