பொடி மெனிக்கே ரயிலில் கொழும்பு நோக்கிப் பயணித்த போது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை மணமகள் போன்று அலங்கரிக்கப்பட்ட சம்பவம் பதிவானது.
மணப்பெண் போட்டியில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய குழுவொன்றினால் குறித்த வெளிநாட்டுப் பெண் இலங்கை மணமகள் போல் அணிவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் இலங்கை மணமகள் போன்று ஆடை அணிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் பின்னர் அவர் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், குறித்த அழகுக்கலை நிபுணர் உள்ளிட்ட குழுவினர், ஓடும் ரயிலுக்குள் இலங்கையின் திருமண ஆடைகளை வெளிநாட்டுப் பிரஜைக்கு அணிவித்து அவரை அழங்கரித்துள்ளனர்.
