Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதட்டுப்பாடாகவுள்ள 37 மருந்துகளை வழங்கும் WHO

தட்டுப்பாடாகவுள்ள 37 மருந்துகளை வழங்கும் WHO

நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் கூறினார்.

இலங்கையின் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரிடம் இதன்போது தௌிவுபடுத்தியதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles