யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் மூலம் 7,700 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
விரைவில் பனை தென்னை அபிவிருத்தி சபை போன்று கடலட்டை அபிவிருத்தி சபையை உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று அவர் தனது கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் தற்போது 1700 கடலட்டைப் பண்ணைகள் வந்துள்ளன என்றும் கடலட்டை மூலம் கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று மடங்காக அதிகரிப்பதே தனது நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
