உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதிக்கப்படுவது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படை உண்மைகள் குறித்து விசாரிக்க அண்மையில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் வேறு திகதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.