இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்களால் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள பின்னணியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.