Sunday, June 15, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் உடல் எடை அதிகரித்தோர் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் உடல் எடை அதிகரித்தோர் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எடை அதிகரிப்பு காரணமாக தொற்றாத நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.

உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் கடந்த 4ஆம் திகதி ‘விழிப்புடன் இருப்போம் உடல் பருமனில் இருந்து விடுபடுவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

15% பெண்களும் 6.3% ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளJ.

பெண்களிடையே உடல் பருமன் மற்றும் அதிக எடை 2021 இல் 43% ஆக அதிகரித்துள்ளதுடன், 2015 இல் இது 34% ஆக இருந்தது

உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அடிப்படையில் அதிக எடை மற்றும் உடல் பருமன் தீர்மானிக்கப்படுதுடன், உலக சுகாதார அமைப்பின்புள்ளிவிவரங்களின்படி, ஆரோக்கியமான நபரின் பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருக்க வேண்டும்.

30க்கு மேற்பட்ட பிஎம்ஐ உடல் பருமனாகவும், 25 முதல் 29.9க்கு இடைப்பட்ட பிஎம்ஐ அதிக எடை கொண்டதாகவும் கருதப்படுகிறது.

ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் பிஎம்ஐ 23 ஆகப் பராமரிக்க வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles