இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், அது கொழும்பைப் பாதிக்கும் என்றும்இ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் ஹிம்ச்சல் பகுதிக்கு கீழே அமைந்துள்ள நகரத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அங்கு கொழும்பில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பேராசிரியர் வலியுறுத்தினார்.
இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என அவர் தெரிவித்தார்.